வெள்ளி, 1 மே, 2015

உழைப்பவர் போற்றும் மே தினம்!

 


இன்று  மே தினம்.  உலகத் தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்கின்ற நாள்.  இப்போது கடைப்பிடிக்கப் படுகின்ற 8 மணி நேர வேலை, வார விடுமுறை போன்ற தொழிலாளர் உரிமைகளை நாம் எப்படி பெற்றோம்? இதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வோம்.


நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட காலம் அது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த இக்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு நாடுகளிலும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன.  இதில் குறிப்பிட வேண்டியது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் ஆகும்.  ஆறு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது சாசன இயக்கம். 10 மணி நேர வேலை கோரிக்கை என்பது அதில் முக்கியமான ஒன்று.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தொழில்துறை வேகம் பிடித்தது. நவீன உலகம் என்றழைக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அப்போதுதான் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை அவர்களை வேலை வாங்கினர். இதற்கு எதிராக இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட சாசன இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் அந்தக் காலக்கட்டத்தில் பல நாடுகளுக்கும் பரவியது.
ஆஸ்திரேலியாவில் கட்டுமான தொழிலாளர்கள்தான் 8 மணி நேர வேலை கோரிக்கையை வலியுறுத்தி முதன் முதலாக 1856ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக இது அமைந்தது. ரஷ்யாவில் சார் மன்னரின் ஆட்சியில் 8 மணி நேர வேலை நேரத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. . அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது.


1886 மே மாதம் 3 ஆம் தேதி, சிகாகோவில் மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கண்டன கூட்டம் நடத்திய போது கலவரம் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில்  4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து நடைபெற்ற கண்டன கூட்டத்திலும் கலவரம் உருவாகி,  காவலர் ஒருவர் இறந்தார். இதற்கு காரணமானவர்கள் என தொழிலாளர் தலைவர்கள் 4 பேர்  மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நால்வரும்  1887ம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
1890ம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்று கூடி,  சிகாகோ சம்பவத்தை கண்டித்ததோடு, 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், 1890ம் ஆண்டு மே முதல் தேதியில் அனைத்துலக தொழிலாளர் இயக்கங்களை நடத்தவும் தீர்மானங்களை நிறைவேற்றியது.  உலகத் தொழிலாளர்களுக்கு விடப்பட்ட இந்த அறைகூவலைத் தொடர்ந்துதான்,    மே 1-ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
இவ் வரலாற்றுப் பின்னணியைத் தொடர்ந்து, மே தின பதிவாக இன்னொரு   விஷயத்தையும் அறிந்து கொண்டு உள்ளத்தில் உறுதி ஏற்போம்!


இந்தியாவில் சென்னையில்தான் தொழிலாளர் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.  பொதுவுடை மைவாதியான ம.சிங்காரவேலர்தான் 1923-ல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

இதே சென்னை கடற்கரையில்தான் உழைப்பாளர் சிலை இருக்கிறது. காலத்தால் அழியாத இச்சிலையை வடித்தவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி. நான்கு தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தித் தள்ளுவது போன்று அமைக்கப்பட்ட  இந்தச் சிலை உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகிறது.


உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் என அத்தனையையும் இம்மி பிசகாமல் வெளிப்படுத்தும் சிலை இது. சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடமையை (உழைப்பை) உருவகப்படுத்தும் விதத்தில் இச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. நமக்குள் இருக்க வேண்டிய மன வலிமையையும் ஒற்றுமையயும் வலியுறுத்துகின்ற அம்சமே இந்த உழைப்பாளர் சிலை.
மே தினம்..! உழைப்பவர் சீதனம்..!
உழைப்பே உயர்வு..!

THANKS TO NAKEERAN.

செவ்வாய், 8 ஜூலை, 2014

2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல்; ஒரு பார்வை !!!!!!!!!!!


 2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா இன்று தாக்கல் செய்தார்.
புதிய ரயில்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
ரயில்வே பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* புதிய துறைமுகங்களுக்கு ரயில் சேவை வழங்கப்படும்.

* ரயிலின் வருகை, புறப்பாடு குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்க ஏற்பாடு. 

* மைசூர்- பெங்களூர்- சென்னைக்கு அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்படும். 

* சில ரயில்களின் வேகம் 160 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வரை அதிகரிக்கப்படும்.

* முதல் தர அந்தஸ்து உள்ள ரயில் நிலையங்களில் வைஃபை வசதி.

* பார்சல்களை பாதுகாக்க தனியார் உதவியுடன் ரயில் நிலையங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் வசதி அமைக்கப்படும்.

* முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளுக்கு இணையத்தில் டிக்கெட் வாங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களை இணைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

* முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுத்தப்படுத்துதலில் தேர்ந்த நிறுவனங்களின் உதவியை ரயில்வே பெறும்.

* கட்டமைப்புகளை மேம்படுத்த உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து முதலீடு கோரப்படும்.

* 2014-15ஆம் ஆண்டில் ரயில்வேயின் செலவினம் ரூ.1,49,176 கோடியாக இருக்கும்.

* யாத்ரீர்களின் வசதிக்காக ராமேஸ்வரம், 

* நடைமேடை டிக்கெட்டை இணையத்தில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மும்பை- அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்.

* மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.

* ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவர்.

* தபால் நிலையம், செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு விரிவுபடுத்தப்படும்.

* 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நான்கு திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

* ரயில்களில் பயோ டாய்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ரயில்வேயில் அந்திய நேரடி முதலீடுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

* முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் உதவியுடன் லிஃப்ட் அமைக்கப்படும்.

* ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

* 50 ரயில் நிலையங்களை ஏஜென்சிகள் மூலம் பராமரிக்க நடவடிக்கை.
* புகழ் பெற்ற நிறுவனங்களின் உணவுப்பொருட்களை ரயில்களில் அறிமுகம் செய்ய திட்டம்.

* ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

* அனைத்து ரயில்களும், ரயில் நிலையங்களும் சுத்தமாக பராமரிக்கப்படும்.

* உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்கிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும்

* சிறிய அளவிலான புதிய திட்டங்கள் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் 3,700 கி.மீட்டருக்கு புதிய பாதை அமைக்க ரூ.41,000 கோடி செலவிடப்படும்.


தனியார் பங்களிப்பு தேவை

* ரயில்வேத்துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பு தேவை

* 2013-14ல் ரயில்வேயின் செயல்பாட்டு லாபம் குறைந்தது.

* எந்த நடைமேடைக்கும் செல்ல பேட்டரி வாகனங்களை இயக்க திட்டம்.


குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்

* அனைத்து ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்.

* வைர நாற்கரத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 லட்சம் கோடி தேவை

* புல்லட் ரயில்களை இயக்க ரூ.60,000 கோடி தேவைப்படுகிறது.

* ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தேவை.

* பயணிகளுக்கான ரயில் சேவை தருவதில் இழப்பு 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* வர்த்தக நிறுவனம் போல் ரயில்வே, வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு.

* ரயில் கட்டண உயர்வு கடினமானது. ஆனால், தவிர்க்க முடியாதது.

* பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் வேறு ஆதாரங்கள் மூலம் ரயில்வேக்கு நிதிதிரட்ட முடிவு

* உள்நாட்டு, அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் நிதி திரட்டப்படும்.

* ரயில் கட்டண உயர்வால் 8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* ஒரு பயணியை ஒரு கிலோ மீட்டர் அழைத்துச் செல்ல 10 காசுகளாக இருந்த செலவு தற்போது 23    பைசாவாக உயர்ந்துள்ளது.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்கள் மூலம் 31 சதவீதம் சரக்குகள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன.


வரவு 1 ரூபாய்...செலவு 94 காசுகள்
* ஒவ்வொரு ரூபாய் வரவிலும் 94 காசுகள் செலவாகி விடுகிறது.

* ரயில் கட்டணங்களை நிர்ணபிப்பதில் சீரான நடைமுறைகள் இல்லை.

* கடந்த காலங்களில், முதலீடுகள் தவறான வழிகளில் செலவழிக்கப்பட்டுள்ளன.

* உலகின் மிகப்பெரிய சரக்கு எடுத்துச் செல்லும் துறையாக ரயில்வேத்துறை எடுத்து செல்ல திட்டம்.

* ரயில் இணைப்பு இல்லாமல் உள்ள இடங்களில் சேவை தொடங்குவது சவாலானது.


100 கோடி டன் சரக்குகள் 
*  இந்தியன் ரயில்வே இந்தியாவின் அடையாளமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

* 100 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாளுகிறது.

* பாதுகாப்புப்படையினரின் முதுகெலும்பாக ரயில்வேத்துறை செயல்படுகிறது.

* நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் தேவை.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்வே துறை சவால் நிறைந்தது

* பதவியேற்ற ஒரு மாதத்தில் புதிய சேவைகளை தொடங்க பல கோரிக்கைகள் வந்துள்ளன.

* ரயிலில் இதுவரை பயணிக்காத மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். 


30 லட்சம் ஊழியர்கள்
* 2.3 கோடி பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

* 30 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வேத்துறை.

* திட்டங்களை அறிவிப்பதை விட செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதுள்ளது

*  ரயில்வே துறையில் தேவைக்கும், கிடைக்கும் வருவாய்க்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. முந்தைய கட்டண கொள்கை சமச்சீராக இல்லை;


உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை

* கட்டண உயர்வு மட்டுமே ரயில்வே துறையை மேம்படுத்தாது; மற்ற வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

* உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

புதன், 25 ஜூன், 2014

V.P.சிங் அவர்களின் பிறந்தநாள் விழா



















இன்று (25.06.2014)  நமது மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு. V.P.சிங் அவர்களின் பிறந்தநாள் விழா நமது AIOBC  த்திய சங்க அலுவலகத்தில் கொண்டாப்பட்டது.

செவ்வாய், 24 ஜூன், 2014

V.P.Singh

V. P. Singh

Former Prime Minister of India

Vishwanath Pratap Singh, Indian politician and government official, was the eighth Prime Minister of India and the 41st nominal Raja Bahadur of the northern kingdom of Manda.
Born: June 25, 1931, Allahabad
Died: November 27, 2008, New Delhi
Office: Minister of Finance of India since 1984
Education: Colonel Brown Cambridge School, Allahabad University,University of Pune

செவ்வாய், 27 மே, 2014

பொதுசெயலாளர் வாழ்த்து


கர்நாடகாவின் முதல்–மந்திரியாகவும், கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். கட்சியின் ஆணைக்கு ஏற்ப முதல்வர் பதவியை ஜெகதீஷ் ஷெட்டருக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகியவர். 61 வயதாகும் திரு.சதானந்த கவுடா, தற்போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ரயில்வே துறை மந்திரியாக பொறுப்பேற்கிறார்.  
AIOBC - Southern Railway பொதுசெயலாளர் J.K.புதியவன் சார்பாகவும்  மற்றும் நிர்வாகிகள் சார்பாகவும்  ரயில்வே துறையை  முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்வழிகாட்ட மனமாற வாழ்த்துகிறோம்.